Friday, May 21, 2010

நீ...

என் பெயரை அறிந்தவன் நீ ...
பெயருக்குள் நீ இருப்பது தெரியவில்லையா ???
என் கவிதையை ரசிப்பவன் நீ ...
ரசனைக்குரியவன் நீ என்பது புரியவில்லையா ???
என் செல்வத்தை தெரிந்தவன் நீ ...
மனதில் உள்ள ஆசைகள் அறியவில்லையா ???
என் அன்பை பெற்றவன் நீ...
அழகான  காதலை உணரவில்லையா???
என்னை சிரிக்க வைத்தவன் நீ ...
அழுகின்ற நெஞ்சம் கேட்கவில்லையா???
என் தாகத்தை தீர்த்தவன் நீ...
ஏங்க வைக்கும் பயணம் முடிவில்லையா ???
என்னை கண்டவன் நீ ...
என்னுள் இருக்கும் உன்னை காணவில்லையா ???

Thursday, May 20, 2010

கண் எதிரே வருவதெல்லாம்
கண் மூடி பார்க்கிறேன்!!!
காணாத இடத்தில் இருப்பவனை
கண் முன்னே காண்கிறேன் !!!

Tuesday, May 18, 2010

சிலை

கல்லை மிதித்தவன்
கல்லை ரசிக்கிறான்
"சிலை"யாக 
செதுக்கியப்பின்......

மரணம்

உன் வருகைக்காக சூரியனிடம்
சண்டையிட்டேன் ...
ஆனால்...
நிலவு துணை நின்றது ...
நீ வரவில்லை...
என் "மரணம்" தான் வென்றது !!!

ரோஜா

என் காதலை வெளிப்படுத்திய ரோஜா ..
என்றும் பூத்திருக்கும் என் கல்லறையில்...
உனக்காக...
நீ சூடுவாய் என்று .....!

காலம்

உன்னோடு வாழ்ந்த காலங்கள்
என் நெஞ்சம் மறவாத நினைவுகள்
திரும்பி பார்க்கிறேன்
மறுபடியும் அந்த காலம் வருமா என்று ?

வார்த்தைகள்

உன் கண்கள் பேசும் வார்த்தைகள்
எனக்கு கேட்கவில்லை ...
நான் கேட்க நினைக்கும் வார்த்தைகளை
நீ பேசுவதில்லை ...

தூக்கம்

இருளை  கண்டு பயந்து இரு...
விழிகளை மூடி கொள்வதற்கு பெயர் ...
"தூக்கம்" 

malar

எழுந்திரு !
உன் படுக்கை
முள்ளில் இல்லை ...
தேடி செல்
உனக்காக பூத்திருக்கிற
மலரில் ...