என் பெயரை அறிந்தவன் நீ ...
பெயருக்குள் நீ இருப்பது தெரியவில்லையா ???
என் கவிதையை ரசிப்பவன் நீ ...
ரசனைக்குரியவன் நீ என்பது புரியவில்லையா ???
என் செல்வத்தை தெரிந்தவன் நீ ...
மனதில் உள்ள ஆசைகள் அறியவில்லையா ???
என் அன்பை பெற்றவன் நீ...
அழகான காதலை உணரவில்லையா???
என்னை சிரிக்க வைத்தவன் நீ ...
அழுகின்ற நெஞ்சம் கேட்கவில்லையா???
என் தாகத்தை தீர்த்தவன் நீ...
ஏங்க வைக்கும் பயணம் முடிவில்லையா ???
என்னை கண்டவன் நீ ...
என்னுள் இருக்கும் உன்னை காணவில்லையா ???
Friday, May 21, 2010
Thursday, May 20, 2010
Tuesday, May 18, 2010
மரணம்
உன் வருகைக்காக சூரியனிடம்
சண்டையிட்டேன் ...
ஆனால்...
நிலவு துணை நின்றது ...
நீ வரவில்லை...
என் "மரணம்" தான் வென்றது !!!
சண்டையிட்டேன் ...
ஆனால்...
நிலவு துணை நின்றது ...
நீ வரவில்லை...
என் "மரணம்" தான் வென்றது !!!
ரோஜா
என் காதலை வெளிப்படுத்திய ரோஜா ..
என்றும் பூத்திருக்கும் என் கல்லறையில்...
உனக்காக...
நீ சூடுவாய் என்று .....!
என்றும் பூத்திருக்கும் என் கல்லறையில்...
உனக்காக...
நீ சூடுவாய் என்று .....!
காலம்
உன்னோடு வாழ்ந்த காலங்கள்
என் நெஞ்சம் மறவாத நினைவுகள்
திரும்பி பார்க்கிறேன்
மறுபடியும் அந்த காலம் வருமா என்று ?
என் நெஞ்சம் மறவாத நினைவுகள்
திரும்பி பார்க்கிறேன்
மறுபடியும் அந்த காலம் வருமா என்று ?
வார்த்தைகள்
உன் கண்கள் பேசும் வார்த்தைகள்
எனக்கு கேட்கவில்லை ...
நான் கேட்க நினைக்கும் வார்த்தைகளை
நீ பேசுவதில்லை ...
எனக்கு கேட்கவில்லை ...
நான் கேட்க நினைக்கும் வார்த்தைகளை
நீ பேசுவதில்லை ...
Subscribe to:
Posts (Atom)