Saturday, August 14, 2010

பேசும்

என் கண்கள் பேசும் உன் பார்வையால்...
என் மௌனம் பேசும் உன் நினைவால்...
என் மனம் பேசும் உன் அன்பால்...
என் கண்ணீர் பேசும் உன் பிரிவால்...

என் எழுத்துக்கள்

 என் எழுத்துக்கள் என் வரிகள்
  மனதின் உயிர் துடிப்புகள்...
என் இதயம் சுவாசிப்பது அன்பு நினைவுகள்...
உணர்வதை எழுதுகிறேன்...
எழுவதற்காக உணர்வதில்லை...

வாழ்கிறேன்

நீ என்னை நினைக்காத போதும்
  என் நினைவுகளால்
 உன் மனம்
     என்னை நினைக்கும்
          என்ற
நம்பிக்கையில் வாழ்கிறேன் நான்   

வரிகள்

உனக்காக நான் அனுப்பும் வரிகள் உயிரோட்டமுள்ள என் இதய துடிப்புகள்...
   உனக்கு மட்டுமே சொந்தமானது...
 நீ உணர்ந்து கொண்டால் என் இதயத்துக்குள் உயிர் இருக்கும்...
    நீ தவிர்த்து கொண்டால் என் இதயத்துக்குள் உயிர் ஏங்கும்...